Friday, November 21, 2008

வெளிநாட்டில் மேல்படிப்பு - ஆராய்சி கட்டுரை எழுதுவது

வெளிநாட்டில் மேல்படிப்பிற்கு அப்ளிகேசன் போடும்பொழுது, நீங்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருந்தால், உங்களுக்கு அட்மிஷனும் ஸ்காலர்ஷிப்பும் கிடைப்பது எளிது என்பதை முன்னால் பார்த்தோம். ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் ஐ ஐ டி, ஐ.ஐ.எஸ்.சி (பெங்களூரு), அண்ணா பல்கலைக் கழகம் (சென்னை) இது போன்ற இடங்களில் இருக்கும் பேராசிரியர்களுக்கும் ஆராய்ச்சி கட்டுரை எழுதுவது முக்கியம். அவர்களிடம் experiment செய்ய வசதியும், கம்ப்யூட்டர் வசதிகளும் மற்ற இந்திய கல்லூரிகளைக் காட்டிலும் நன்றாக இருக்கும். இந்த இடங்களில் summer internship செய்தால், உங்கள் பெயருடன் ஆராய்ச்சி கட்டுரை வர வாய்ப்பு அதிகம். ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. , டாடா ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) போன்றவை, வெளிக் கல்லூரி மாணவர்களுக்கு அஃபிஷியலாகவே ‘சம்மர் இண்டர்ன்ஷிப்' என்று ஒரு ப்ரோகிராம் ஒவ்வொரு வருடமும் வெளியிடும். இதை நீங்கள் நடுநடுவில் கூகிளில் சென்று தேடி தெரிந்து கொள்ள வேண்டும். இவை ஜனவரி, பிப்ரவரி சமயம் விளம்பரம் வரும். இதில் தேர்ந்தெடுக்கப் பட்டால், உங்களுக்கு தங்க இடமும், கொஞ்சம் ஸ்காலர்ஷிப்பும் கொடுத்து சுமார் இரண்டு மாதங்கள் ஒரு ப்ராஜக்டும் கொடுப்பார்கள். இங்கே முக்கியமானது ஸ்காலர்ஷிப் அல்ல. அந்த இரண்டு மாதம் நன்றாக வேலை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

இதன் மூலம், நீங்கள் அமெரிக்க கல்லூரிக்கு அப்ளிகேசன் போடும்பொழுது, இந்த ப்ரொபசரிடமும் ‘ரெகமண்டேசன் லெட்டர்' வாங்கலாம். இந்த லெட்டருக்கு கொஞ்சம் அதிக மதிப்பு இருக்கும். இது ‘ஐ ஐ டி' யிலிருந்து வந்ததால் அல்ல; உங்களுடன் தொடர்பில்லாத, உங்கள் முன்னேற்றத்தால் லாபம் பெறாத ஒரு நபரிடம் இருந்து வருவதால். இந்த லாஜிக் என்ன என்றால், ‘உங்கள் கல்லூரி ப்ரொபசர் எப்படியும் உங்களுக்கு நல்ல ரெகமண்டேசன் கொடுப்பார், அவர் உண்மை சொல்கிறாரா என்பது தெரியாது, தன் காலேஜிக்கு நல்ல பெயர் வேண்டும் என்பதால் அப்படித்தான் கொடுப்பார். ஆனால், நீங்கள் வெளியில் இரண்டு மாதம் வேலை செய்த பொழுது, சரியாக வேலை செய்யாவிட்டால், அந்த ப்ரொபசர் நல்ல ரெகமண்டேசன் கொடுக்க மாட்டார்' என்பதாகும். இது முதல் பயன்.

இரண்டு மாத ப்ராஜக்டில் ஆராய்ச்சி கட்டுரை வர சாத்தியம் குறைவே. ஆனால், பெரும்பாலும் என்ன விதமான ப்ராஜக்ட் கொடுப்பார்கள் என்றால், ஒரு பெரிய (ஆறு மாதம் ஆகும்) ப்ராஜக்டில் ஒரு பகுதியை எடுத்துக் கொடுப்பார்கள். மற்ற மாணவர் யாராவது மற்ற பகுதிகளை செய்து கொண்டிருப்பார். நீங்கள் நல்ல படி வேலை செய்தால், மற்ற மாணவரின் வேலையையும் சேர்த்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதுவார்கள். அதில் உங்கள் பெயரும் வரும். வர வேண்டும் (ஆராய்ச்சியில் உண்மையிலேயே உங்கள் பங்கு இருந்தால்).

ஆராய்ச்சி ஓரளவு முன்னேறி இருந்தால், அதை கான்பரன்ஸில் எழுதுவார்கள், சொல்வார்கள். கான்பரன்ஸில் வெளியிட அது முழுக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியாவில்
ஒரு கான்பரன்ஸில் வெளிவந்தால் அதற்கு கொஞ்சம் மதிப்பு. ஒரு இண்டெர்நேசனல் கான்பரஸில் வந்தால் அதிகம் மதிப்பு. கான்பரன்ஸில் உங்கள் வேலை வந்தால் அதை அப்ளிகேசனில் குறிப்பிடலாம். அதற்கு ஓரளவு மதிப்பு உண்டு. இது இரண்டாம் பயன்.

(குறிப்பு: டெக்னிகல் விழா என்ற பெயரில் நடக்கும் ‘சாஸ்த்ரா', ‘அல்கெமி', ‘மெகானிகா' என்ற நிகழ்ச்சிகளில் கலந்து பரிசு வாங்கினால் அதற்கு அவ்வளவாக மதிப்பு இல்லை. ஏனென்றால் இந்த நிகழ்ச்சிகளில் பரிசு வாங்கினால் ‘இந்த மாணவர் வேலை செய்தால் ஆராய்ச்சி கட்டுரை நிறைய வரும்' என்று சொல்ல முடியாது. உங்களின் எந்த ஒரு திறமையையும், அமெரிக்க ப்ரொபசர் எடை போடும் போது இந்த பாயிண்ட் தான் திரும்பத் திரும்ப அவர் மனதில் வரும்)

இதே கான்பரன்சில் வருவதை விட, ஒரு ஜர்னல் (journal) என்ற மாதப் பத்திரிகையில் வந்தால் அதிக மதிப்பு. இதற்கு ஆராய்ச்சி கட்டுரை எழுத நிறைய பயிற்சி வேண்டும். நான் இப்படி ப்ளாக் எழுதுவது போல எழுதி அனுப்பினால், உடனே ‘ரிஜக்ட்' என்று வந்து விடும். இது கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி இல்லாததால், முதல் முறை சரியாக வராது. ஆனால் அமெரிக்க ப்ரொபசரும் இதைப்பற்றி அதிகம் கவலைப் படமாட்டார். ‘நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்து ரிசல்ட் கொண்டு வந்தால் போதும், எழுதுவதை நான் பாத்துக்கொள்கிறேன்' என்ற எண்ணத்தில் இருப்பார். அதனால், நீங்கள் ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றி கவலைப்பட வேண்டாம். இதை ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக் கழக ப்ரொபசர் பார்த்துக்கொள்வார். ஏனென்றால் அவருக்கும் ஆராய்ச்சி கட்டுரை வெளிவருவது முக்கியம்.

இப்படி ஸ்காலர்ஷிப்புடன் சம்மர் இண்டெர்ன்ஷிப் ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் , ஒவ்வொரு ஐஐடியிலும் நாலு ஐந்துதான் இருக்கும். எல்லோருக்கும் அது கிடைக்காது. மற்றவர்கள் என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கும் வழி உண்டு. ஆனால் கொஞ்சம் அதிக வேலை செய்ய வேண்டும், தவிர செலவாகும்.

இண்டெர்னெட்டில் சென்று, ஒவ்வொரு ப்ரொபசரின் வெப்சைட்டையும் பார்க்க வேண்டும். அதில் யார் சமீபத்தில் (ஒரு இரண்டு வருடங்களில்) ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர் என்ன ஃபீல்டில் இருக்கிறார் என்பதையும் கவனிக்கவும். அது உங்களுக்கு பிடித்திருந்தால் மிக நல்லது. அப்படி எதுவும் குறிப்பிட்டு இல்லை என்றாலும் சரி. (நானும் கல்லூரியில் படிக்கும்பொழுது 'எதா இருந்தாலும் சரி' என்ற மனநிலையில்தான் இருந்தேன். ‘இந்த பீல்டுலதான் வேலை செய்வேன், வேற பீல்டில் செய்ய மாட்டேன்' என்று நினைக்கவில்லை). சமீபத்தில் கட்டுரை எழுதாதவர், ஆராய்ச்சியை நிறுத்தி விட்டிருக்கலாம், அதனால் அவரை விட்டு விடலாம்.

இப்படி சில ப்ரொபசர்களை செலக்ட் செய்யவும். ஒவ்வொருவரும் எந்த சப்ஜெக்டில் வேலை செய்கிறார்களோ, அதைப்பற்றி கூகிள், விக்கி போன்றவைகளில் சென்று படியுங்கள். அந்த ப்ரொபசர்களின் ஆராய்சி கட்டுரை கிடைத்தால் மிக நல்லது, அதை புரிந்த வரை படியுங்கள். இதை 5, அல்லது 6 ப்ரொபசர்களைப் பற்றிதான் செய்ய முடியும். நூறு பேர் பற்றி செய்ய முடியாது. அதனால், நன்றாக யோசித்து ப்ளான் செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு ப்ரொபசரையும் செலக்ட் செய்த பிறகு 8 மணி நேரமாவது அவர் சப்ஜெக்ட் படிக்க ஒதுக்க வேண்டும்.

பிறகு, அவருக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு அவர் சப்ஜெக்டில் ஈடுபாடு இருக்கிறது என்றும், நீங்கள் அதைப்பற்றி கொஞ்சம் படித்ததில் இன்னும் அதிக ஆர்வம் வந்தது என்றும் சொல்லுங்கள். அவர் கட்டுரையைப் படித்திருந்தால் அதையும் சொல்லவும். பிறகு ‘எனக்கு டிசம்பரில் 30 நாள் லீவு, சம்மரில் இத்தனை நாள் லீவு, நான் மேல் படிப்பு படிக்க விரும்புகிறேன். உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன். இண்டெர்ன்ஷிப் வாய்ப்பு கொடுங்கள்' என்பதை எழுதுங்கள். மெயிலில் “Dear Professor XYZ" என்று அவர் பெயருடன் எழுதவும். அவர் சரி என்று சொன்னால், அந்த கல்லூரிக்கு பக்கத்தில் தங்க, கல்லூரிக்கு போய்வர நீங்கள் உங்கள் காசு செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்கள் குறிக்கோள், 1. நன்கு வேலை செய்து நல்ல ரெகமண்டேசன் வாங்க வேண்டும், 2. ஆராய்ச்சி கட்டுரை வரவேண்டும்.

நீங்கள் நன்கு வேலை செய்தால் நிச்சயம் நல்ல ரெகமண்டேசன் கிடைக்கும். ஆனால் ஆராய்ச்சி கட்டுரை வரும் என்று அடித்து சொல்ல முடியாது. லக் இல்லாவிட்டால் ஒரு வருடம் வேலை செய்தாலும் வராது. ஆனால், போகும்போது ஆப்டிமிஸ்டிக்காக போகவேண்டும்.

இப்படி மெனக்கெடாமல், எல்லா ப்ரொபசருக்கும் ‘Dear Sir/Madam, நான் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்,என் resume அட்டாச் செய்திருக்கிறேன், எனக்கு சம்மர் இண்டர்ன்ஷிப் கொடுங்கள்' என்று கேட்டால், அந்த மின்னஞ்சல் உடனே delete செய்யப்படும். இந்த மாதிரி அவர்களுக்கு தினமும் 10 மெயில் வரும், ஒவ்வொன்றுக்கும் பதில் அனுப்ப மாட்டார்கள். ‘நம்மை பற்றி படிக்க இந்த மாணவன் முயற்சி எடுக்கவில்லை, நாம் எதற்கு இந்த மாணவனைப்பற்றி , அவன் ரெசுமேயை படிக்க வேண்டும்?' என்ற எண்ணம் இயற்கையாகவே பல ப்ரொபசருக்கு தோன்றும். நீங்கள் இந்த 'கும்பலிலிருந்து தனித்து நிற்க வேண்டும்' (You have to stand out).அப்போதுதான் வாய்ப்பு அதிகம்.

Thursday, November 20, 2008

வெளிநாட்டில் மேல்படிப்பு - பிற விஷயங்கள்

இந்தப் பதிவில் ‘ஒரு அமெரிக்க ப்ரொஃபசரின் எதிர்பார்ப்பு என்ன' என்பதைப் பார்க்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யும் ப்ரொஃபசரின் முக்கிய நோக்கம் என்ன என்றால், ‘நிறைய ஆராய்ச்சி கட்டுரை என்ற journal paper எழுத வேண்டும். நிறைய ப்ராஜக்ட் பணம் வாங்க வேண்டும்' என்பதாகும். அதை வைத்துதான் அவரது ‘நிலை' (status) அதிகமாகும்.

ஒரு சிறு குறிப்பு: இங்கு இந்தியாவில் பல தனியார் எஞ்சினியரிங் காலேஜ்களில், BTech முடித்து வேறுவேலை கிடைக்காதவர்களை ஆசிரியர் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் ‘பேராசிரியர்' வேலை மிக அதிக ‘கௌரவம்' உடையது. அதனால், கம்பெனியில் வேலை கிடைப்பதை விட கல்லூரியில் வேலை கிடைப்பது மிக மிகக் கடினம்.பேராசிரியர் வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அங்கு அவர்களுக்கு கம்பெனியில் அதிக சம்பளம் உள்ள வேலை சுலபமாகக் கிடைத்திருக்கும், ஆனாலும் ”வேண்டாம்” என்று சொல்லி விட்டு கல்லூரிக்கு வந்திருப்பார்கள்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், அப்படி வந்தவர்களுக்கு ஈகோ முக்கியம். அதனால், ‘நான் நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறேன்' என்று சொல்வது அவர்களுக்கு மிக முக்கியம். 'நான் ரொம்ப பணக்காரன்' என்று சொல்வது அவ்வளவு முக்கியம் இல்லை.

அவர்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுத மாணவர்கள் செய்யும் ரிசர்ச் வேலை முக்கியம். ஒரு மாணவனை ‘எடுக்கலாமா வேண்டாமா' என்பதை முடிவு செய்ய, ‘இவரை எடுத்தால் நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுத முடியுமா' என்பதுதான் பேராசிரியர் மனதில் முக்கிய கேள்வியாக இருக்கும். மற்ற விஷயங்கள், எடுத்துக்காட்டாக “மாணவன் நன்றாக விளையாடுவாரா” என்பது முற்றிலும் தேவையில்லாத ஒன்று. மாணவர் அங்கு வந்து க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கினால் கூட அவருக்கு ரொம்ப பயனில்லை. கொஞ்சம்தான் பயன் . ” க்ளாஸ் ஃபர்ஸ்ட் மாணவன் என்னிடம் வேலை செய்கிறான், நான் கைடாக இருக்கிறேன்” என்று சொல்லும் பெருமைதான் அவருக்கு அந்த சிறிய பயன்.

உங்கள் GRE மார்க்கும், கல்லூரி ரேங்க்கும், ரெகமண்டேசன் லெட்டரும் ஒரே ஒரு நோக்கத்தில்தான் பார்க்கப்படும். ‘இந்த மாணவர் நம்மிடம் வேலை செய்தால் ஆராய்ச்சி கட்டுரை நிறைய வருமா?”

GREஐ வைத்து, கல்லூரி ரேங்கை வைத்து, லெட்டரை வைத்து ஓரளவுதான் சொல்ல முடியும். இதற்கு முன் உங்கள் கல்லூரியில் இருந்து ஒரு மாணவர் அங்கு போய் நன்றாக வேலை செய்தால், ‘இந்த முறையும் நன்றாக வர வாய்ப்பு உண்டு' என்ற எண்ணத்தில் அவர்கள் ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள்.

இதற்கு மாறாக, இங்கே ஒரு ப்ரொஃபசர் 'இந்த பையன் சூப்பர்' என்று எழுதி, அங்கே போய் அவன் ஊத்திக்கொண்டால், அடுத்து அந்த ப்ரொபசரின் லெட்டருக்கு மதிப்பு இருக்காது. அடுத்து சில வருடங்களில் , அந்த இந்திய கல்லூரியில் இருந்து மாணவர்களை எடுக்கத் தயங்குவார்கள்.

சரி, இதற்கு முன் உங்கள் கல்லூரியில் இருந்து யாருமே போகவில்லை, அல்லது நீங்கள் அமெரிக்காவில் அப்ளிகேசன் போடும் கல்லூரியில் யாரும் போகவில்லை என்றால் என்ன செய்வது?

இங்கே க்ளாஸ் படிப்பைத் தவிர வேறு எந்த வழியிலாவது ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சி கட்டுரை எழுதினால், அது மிகப் பெரிய அளவில் உங்கள் அப்ளிகேசனுக்கு மதிப்பை கூட்டும். ‘பையன் ஏற்கனவே இதில் திறமையுடன் இருக்கிறான், இங்கே வந்தாலும் நன்றாக செய்வான்' என்ற எண்ணம் இருக்கும். GRE மார்க், க்ளாஸ் ரேங்க் எல்லாமே கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. ரெகமண்டேசன் லெட்டர் மோசமாக் இருந்தால் மட்டுமே பாதிப்பு . ‘இந்த பையன் ரொம்ப பிரச்சனை செய்வான்' என்று லெட்டரில் இருந்தால் எடுக்க மாட்டார்கள். ரெகமண்டேசன் மோசமாக இல்லாவிட்டால் உங்கள் வாய்ப்பு நிச்சயம் நன்றாக இருக்கும்.

சரி, ஆராய்ச்சி கட்டுரை எழுதுவது எப்படி? பெரும்பாலான் ஆராய்ச்சிக்கு ‘கவனமும், பொறுமையும் விடா முயற்சியும்' தான் தேவை. ஓரளவு புத்திசாலித்தனம் போதும், அதிபுத்திசாலித்தனம் தேவையில்லை. இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இதுதான் உண்மை. பல மாணவர்கள் ‘ப்ராஜக்ட்' செய்கிறேன் பேர்வழி என்று எதாவது ஆரம்பிப்பார்கள்.ஆனால் அது நினைத்த படி போகாவிட்டால் ஓரிரு வாரங்களில் உற்சாகத்தை இழந்து நிறுத்தி விடுவார்கள். உங்களுக்கு ரொம்ப லக் இருந்தால்தான் முதல் முறையிலேயே வேலை செய்யும். கொஞ்சம் யொசித்துப் பாருங்கள், உருப்படியான ப்ராஜக்ட் முதல் முறையே வந்தால், அது ‘ப்ராஜெக்டே' அல்ல, அது ஒரு க்ளாஸ் ப்ராப்ளம்தான். அவ்வளவு சுலபமாக வராததால்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. ஒருநாள் ஜிம் போய் வெய்ட் தூக்கி, அடுத்த நாள் கண்ணாடியில் பார்த்தால், பாடி டெவலப் ஆகி இருக்காது. அதே சமயம், பொறுமையாக ஆறு மாதம் சென்று உடற்பயிற்சி செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு. ஆராய்ச்சி ஏறக்குறைய அதுபோலத்தான். புத்திசாலித்தனம் அதிகம் இருந்தால், ஆறுமாதத்தில் ரிசல்ட் வருவதை நான்கு மாதத்தில் கொண்டு வரலாம், அவ்வளவே.

இது மட்டும் போதாது, நல்ல ஒரு ப்ராப்ளமும், ரிசல்ட் வந்த பின் அதை நல்ல முறையில் எழுதி பப்ளிஷ் செய்வதும் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரையில் இரண்டு வகை உண்டு. ஒன்று கான்பரன்ஸ், இரண்டாவது ஜர்னல். இது பற்றிய விவரங்களை அடுத்து பார்க்கலாம். பின்னர், எங்கே போய் ஆராய்ச்சி செய்வது, எப்படி முயற்சி செய்வதால் பலன் அதிகம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

வெளிநாட்டில் மேல்படிப்பு - GREக்கு படிப்பது

GRE தேர்வில் மூன்று பகுதிகள் உண்டு. ஒன்று verbal என்ற ஆங்கிலம் பற்றியது. இரண்டாவது quants என்ற கணிதம் பற்றியது. மூன்றாவது analytical என்ற பொது IQ பற்றியது. இரண்டாவதும் மூன்றாவதும் ஒரு மாதம் படித்தாலே போதும். முதல் பகுதிக்கு மட்டும் நன்றாக படிக்க வேண்டும்.

முதல் பகுதியில் ஒரு சொல்லுக்கு சமமான் அர்த்தம் (synonym) எதிர்ப்பொருள்(antonym) ஒரு பத்தியை படித்து அதைப்பற்றிய கேள்விகளுக்கு விடை எழுதுதல்(comprehension)ஆகியவை இருக்கும். இவற்றில் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தைகள் இருக்கும். நன்றாக தயார் செய்தால் மட்டுமே இதில் நல்ல மார்க் எடுக்க முடியும்.

வார்த்தைகளை ‘சும்மா தட்டினால்' ஓரளவுதான் மனப்பாடம் செய்ய முடியும். இவை நன்கு மனதில் பதிய வேண்டினால் என்ன செய்ய வேண்டும்?

Reader's Digest என்ற ஆங்கில மாதப்பத்திரிகை வாங்கி அதில் இருக்கும் கதைகளைப் படிக்கத் தொடங்குங்கள். அதில் கடினமான வார்த்தைகள் பல வரும். அவற்றிற்கு சரியான அர்த்தம் தெரியாவிட்டாலும், மொத்த வாக்கியத்தின் அர்த்தம் பெரும்பாலும் புரியும். நாம் எல்லோருமே அப்படிப்பட்ட சமயங்களில், கதை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மையில் விட்டு விடுவோம். அந்த இடத்தில் அர்த்தம் புரியும், அல்லது நாம் ஒருமாதிரி கற்பனை செய்து கொள்வோம். வேறு ஒரு சமயத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் கேட்டால் நமக்கு தெரியாது.

ஒரு முறை புத்தகம் முழுதும் படித்த பின்னால், நமக்கு எந்த எந்த கதைகள் பிடித்திருக்கிறதோ, அதை மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும் எந்த வார்த்தைக்கு அர்த்தம் துல்லியமாக தெரியவில்லையோ அதை ஒரு நோட்டில் எழுதி, அதன் அர்த்தத்தை டிக்சனரியில் பார்த்து பக்கத்தில் எழுத வேண்டும். அடுத்து, அந்த கதையில் வரும் அந்த முழு வாக்கியத்தையும், நோட்டில் எழுத வேண்டும். இப்படி கதையை படிக்கும்பொழுது, ஒரு கதை படிக்கவே நிறைய நேரம் ஆகும். ஆனால் இதில் படிக்கும் வார்த்தைகள் மனதில் நிற்கும்.

ஏன்?

Barron's புக்கில் (அல்லது அது போன்ற புத்தகத்தில்) இருப்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வார்த்தைகள். இப்படி படிப்பது நினைவில் இருக்காது. ஆனால், நாம் அனுபவித்துப் படித்த கதையும், அதன் வாக்கியங்களும் மனதில் அதிக நாள் நிற்கும். நீங்கள் இப்படி எழுதும் நோட் தான் உங்கள் Barons' guide. இதை இரண்டாம் ஆண்டிலிருந்து நீங்கள் செய்து வந்தால் பின்னர் GREக்கு இரண்டு மாதம் முன்னால் இந்த நோட் படித்தால் உங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கதை சொல்லும். அந்த வார்த்தையைப் பார்த்த உடனே உங்களுக்கு அந்த வாக்கியமும் கதையும் நினைவுக்கு வரும்.

ஏன் Reader's Digest?

இது தான் வேண்டும் என்பது இல்லை. ஆனால் இது போன்ற தரம் இருக்கும் எந்தப் பத்திரிகையும் ஓகே. மாதப் புத்தகம்தான் சரி, தினசரி பேப்பர் சரிவராது. ஏனென்றால் ஒரு மாதம் கழித்து பேப்பர் போய்விடும். புத்தகம் என்றால் இரண்டு வருடம் கழித்துக் கூட நீங்கள் மீண்டும் அந்த கதைகளை படிக்கலாம்.

இதற்கு பதில் Sidney Sheldon போன்ற புத்தகம் படிக்கலாமா? படிக்கலாம், ஆனால், மாதப் பத்திரிகையில் பலரும் பல வித எழுத்து நடையில் எழுதுவார்கள். அதனால் மாதப் பத்திரிகை கொஞ்சம் better.

இப்படி படித்தாலும், கடைசியில் கொஞ்சம் ஓரிரு மாதங்கள் Barons படிக்கவும். விட்டுப் போன சில வார்த்தைகளை ‘தட்டி' மார்க் வாங்கலாம். ஆனால் நோட் போட்டு எழுதியதில் அடிப்படை கொஞ்சம் strongஆக இருக்கும்.

இந்த முறையில் செய்ய குறைந்தது தேர்வு எழுத 6 மாதங்கள் முன் ஆரம்பிக்க வேண்டும். முடிந்தால் இரண்டாம் ஆண்டு முதல் தயார் செய்ய தொடங்குங்கள். ஆனால் இரண்டாம் ஆண்டு முதல் பேரன்ஸ் படிக்க வேண்டாம்! ஒரு அர்த்தமில்லாமல் மனப்பாடம் செய்த வார்த்தைகள் சில மாதங்களில் மறந்துவிடும். அதனால் பேரன்ஸ் புத்தகத்தை தேர்வுக்கு 2,3 மாதங்களுக்கு முன் படித்தால் போதும்.

அடுத்து ‘GRE படிப்பது தவிர வேறு என்ன வழிகளில், வெளிநாட்டு படிப்பு, ஸ்காலர்ஷிப் நமக்கு கிடைக்கும் சான்ஸை அதிகப்படுத்தலாம்' என்பது பற்றி பார்க்கலாம்.

வெளிநாட்டில் மேல்படிப்பு படிப்பது பற்றி

இந்தப் பதிவில், வெளிநாட்டில் எஞ்சினியரிங் மாணவர்கள் மேல் படிப்பு படிப்பதற்கு எப்படி தங்களை தயார் செய்து கொள்ளலாம் என்பது பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்களை எழுதுகிறேன்.
இது பொறியியல் (Engineering) மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் மூன்று வருடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு உதவலாம்.

நீங்கள் நான்கு வருடம் பொறியியல் படித்து விட்டு மேல்படிப்பிற்கு அமெரிக்காவிற்கு செல்ல விரும்பினால், அதற்கு இரண்டாம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து கொள்வது நல்லது. மேல்படிப்பிற்கு ஸ்காலர்ஷிப்புடன் போக மூன்று விஷயங்கள் தேவை
  1. ஓரளவு நல்ல கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும்
  2. GRE என்ற தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும்
    • கூடவே TOEFL என்ற தேர்வும் எழுத வேண்டும். ஆனால் GREக்கு நன்றாக படித்தால், TOEFL சுலபமாக எழுதலாம்

  3. கல்லூரி பேராசிரியரிடம் நல்ல Recommendation Letter வாங்க வேண்டும்


1. கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்குவது உங்கள் கையில். ‘ஓரளவு நல்ல கல்லூரி' என்றால் என்ன? நீங்கள் சேர்ந்திருக்கும் கல்லூரியில் இருந்து ஏற்கனவே சீனியர்கள் வெளிநாட்டுக்கு போயிருந்தால் (அவர்கள் அங்கு ஓரளவு நன்றாக படித்தால்) உங்களுக்கு வாய்ப்பு அதிகம். இதை ‘ஓரளவு நல்ல கல்லூரி' என்று சொல்லலாம். அப்படி இல்லாவிட்டால், நீங்கள்தான் தொடங்க வேண்டும்!

2. GRE என்பதற்கு எப்படி படிப்பது. இது பற்றி தமிழில் பதிவுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் நிறைய இருக்கும். இந்த தேர்வில் மூன்று பகுதிகள் உண்டு. இதில் கடினமானது verbal என்ற ஆங்கிலப் பகுதிதான். இதில் நல்ல மார்க் எடுக்க ஆங்கிலத்தில் பல கடினமான வார்த்தைகளுக்கு பொருள் தெரிய வேண்டும். பல வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஓரளவு ஒப்பேத்தலாம். இதற்கு Barron's guide என்றும் வேறு சில புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், இதைவிட சிறப்பாக செய்ய வழி உண்டு. (அடுத்த பதிவில்)

3. கல்லூரி ஆசிரியரிடம் நல்ல Recommendation Letter. நன்றாக படித்து, ரொம்ப ரகளை செய்யாவிட்டால் இது கிடைக்கும். ஆனால், உங்கள் கல்லூரி பேராசிரியரை அமெரிக்க கல்லூரியில் இருப்பவர்களுக்கு தெரியாவிட்டால், இதற்கு அவ்வளவு மதிப்பு இல்லை. இந்த நிலையில், ரெகமண்டேஷன் சரியில்லை என்றால் உங்கள் அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். ஆனால், ரெகமண்டேஷன் நன்றாக இருந்தால் அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இது தவிர வேறு சில வழிகளில் உங்கள் சான்ஸை அதிகமாக்கலாம். அவை என்ன என்பதை பார்க்கும் முன்னால், ஒரு அமெரிக்க கல்லூரி பேராசிரியர், தன்னிடம் வரும் மாணவர் “என்ன திறமைகளை கொண்டிருக்க வேண்டும்” என்று எதிர்பார்ப்பார் என்பதை பார்க்கலாம். அதை சரியாக புரிந்து கொண்டால், நாம் எதை முன்னிறுத்த வேண்டும் (emphasize செய்ய வேண்டும்) என்பது சுலபமாக விளங்கிவிடும்.

Wednesday, November 12, 2008

சென்னையில், MCA படித்தவருக்கு வேலை தேவை

பெயர்: நளாயினி ராமநாதன்.
மற்ற விவரங்கள்: 2007ல் கோவையில் MCA முடித்திருக்கிறார் (80%). 2004ல் சிவகாசி ராஜரத்தினம் பெண்கள் கல்லூரியில் BSc(Physics) படித்திருக்கிறார் (74%). 2007 முதல் 2008 வரை (ஒரு வருடம் சில மாதங்கள்) அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistantஆக வேலை செய்திருக்கிறார் (Oracle, J2EE implementation). தற்போது வேளச்சேரியில் இருக்கிறார்.

மின்னஞ்சல்: nalayiniramanathan.mea _ AT _ gmail.com

Software Proficiency: Core Java, J2EE, Oracle-9i, RDBMS, Windows NT
Credentials: Microsoft certified professional (MCP), Completed ASP .NET basic course, Diploma in information technology (DIT), certified course in Desktop Publishing (DTP)

Presented two papers in WIMAX Technology and one paper in Role of Magnetism in Physics.

Languages:

Spoken and written: Tamil, English
Spoken: Telugu, Malayalam

Monday, November 3, 2008

சென்னையில் இ.சி.இ. டிப்ளமா படித்தவருக்கு வேலை தேவை (ECE Diploma Holder Looking for Job in Chennai)

சென்னையில் ‘பரத் ஜெபராஜ்' என்பவர் வேலை தேடுகிறார். டிப்ளமா இ.சி.இ. (2007)ல் படித்திருக்கிறார். DCL கம்பெனியில் system admin (maintenance)ஆக 2007 முதல் 2008 வரை வேலை செய்திருக்கிறார். விடியோ கான்பரன்ஸ் சிஸ்டம், மெர்க்குரி சாஃப்ட்வேர் (மெடிக்கல் துறையில்) ஆகியவற்றை maintain செய்திருக்கிறார்.

வயது: 20
செல்பேசி: 99940 90670
மின்னஞ்சல்: bharathmkm@gmail.com

உங்களுக்குத் தெரிந்து இவருக்கு ஏற்ற வேலை காலியாக இருந்தால், இணைத்து விடலாம். If you know a suitable opening, you can link this person with the employer and let them decide.

Sunday, November 2, 2008

வேலை வாய்ப்பு தேடி

இவருக்கு தற்பொழுது வேலை கிடைத்துவிட்டதால், இந்த resumeவை விட்டுவிடலாம்.

சென்னையில் , B.Com. and Diploma in Computer Hardware வேலை தேடுகிறார். விவரங்கள் கீழே.

S. Sureshkumar
Plot No 1, Thulukkanathamman Koil St. Extn.
Thirumalai Nagar (Near Saibalaji Nagar)
Pallikkaranai, Chennai 601 302

Objective: A challenging position where I can apply my hardware and software skills and learn

Education:













Examination
Institution Division/Class Year
HSC Board of HSE, TN Second 2004
Diploma in Comp. Hardware TN Christ Council, Guindy First 2005
B. Com (commerce) Madras UnivThird 2008


Software Skills: Desktop Publishing, Page Maker, Corel Draw, Photoshop. Windows family OS
Hardware Skills: Assembly of CPU, Mother board, Hard drive etc.
Other relevant skills: Typewriting in English (Lower)
Experience:









Employer Details Type of Work From To
Micro Film Raja Muthiah Research Library (RMRL) Micro filming, Editing, film scanning Aug 2005 Aug 2006
IIT-Madras, JEE office Data Entry for JEE application Nov 2006 July 2007
IIT-Madras, GATE Office Data Entry for GATE application. Software and Hardware maintenance Aug 2007 June 2008


Other information:
Date of Birth: 08-04-1985 (DD-MM-YYYY)
Father’s Name: P. Shanmugam