Sunday, March 22, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை

இப்போது +2 தேர்வுகள் முடிகின்றன. நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ தமிழ் நாட்டில் பொறியியல் (என்ஜினியரிங்) கல்லூரியில் சேர விரும்பினால், உங்களுக்கு கீழே இருக்கும் விவரங்கள் உதவலாம்.

  1. தமிழ் நாட்டில், அரசு நேரடியாக அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நான்கு கல்லூரிகளை நடத்துகிறது.இவை 1. CEG என்று அழைக்கப் படும் College of Engineering , 2. AC Tech என்று அழைக்கப படும் Alagappa College of Technology , 3. SAP என்று அழைக்கப்படும் School of Architecture and planning , 4. MIT என்று அழைக்கப்படும் Madras Institute of Technology ஆகும்.


  2. இது தவிர அரசு கோயம்புத்தூர், திருநெல்வேலி, பருகூர், சேலம் என்று பல இடங்களில் பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறது.

  3. அடுத்து, தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.


இந்த அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் எல்லாம் அண்ணா பல்கலைக் கழக விதிமுறைகள் கீழே வரும். அண்ணா பல்கலையில் இருக்கும் நான்கு கல்லூரிகளுக்கும், தவிர தமிழ் நாட்டில் இருக்கும் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், இந்த எல்லா இடங்களிலும் சேர்வதற்கு ஒரே ஒரு அப்ளிகேசன் தான் போட வேண்டும். இதில் நீங்கள் விரும்பும் கல்லூரியில், விரும்பும் பிரிவில் சேர முடியுமா என்பது, உங்கள் +2 மதிப்பெண்களைப் பொறுத்து இருக்கும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலில் அதிகம் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

அண்ணா பல்கலை வளாகக் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் சேருவதற்கு நன்கொடை என்ற டொனேசன் கிடையாது. இதில் வருடம் கட்ட வேண்டிய கட்டணமும் மிக அதிகமாக இருக்காது.

தனியார் கல்லூரியில் அரசு மூலமும் சேரலாம், மேனேஜ்மெண்ட் என்ற தனியார் மூலமும் சேரலாம். அரசு மூலம் சேர்ந்தால் டொனேசன் கிடையாது. கல்லூரிக் கட்டணம், அரசு கல்லூரியில் வாங்குவதை விட அதிகமாக இருக்கும். இதிலும், உங்கள் மதிப்பெண்களைப் பொறுத்தே முன்னுரிமை இருக்கும்.

தனியார் மேனேஜ்மெண்ட் மூலம் சேர ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி அப்ளிகேசன் வாங்க வேண்டும். இதில் டொனேஷன் இருக்கும். இது சில லட்சங்கள் இருக்கும். இது நீங்கள் கேட்கும் பிரிவு, உங்கள் வீட்டு வருமானம், உங்கள் மதம் ஆகியவற்றை சார்ந்து மாறுபடலாம். மதிப்பெண்ணுக்கு அதிக மதிப்பு (!) இருக்காது. இந்த வழியில் சேர்ந்தால் வருடக் கட்டணம், மிக அதிகமாக இருக்கும். அப்ளிகேசன் வாங்கவே ஆயிரம் ரூபாய் போன்ற ரேஞ்சில் பணம் கட்ட வேண்டி இருக்கலாம்.

இதில் ஒரு சில தனியார் கல்லூரிகளில் விதி விலக்கு உண்டு. ஆனால் பெரும்பாலான கல்லூரிகள் மேலே சொன்னபடிதான் நடக்கின்றன. எனக்கு தெரிந்த விதிவிலக்குகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

4. இவை எல்லாம் தவிர சில கல்லூரிகள் ‘பல்கலைக் கழக' அந்தஸ்து (Deemed university status) பெற்றுள்ளன. அவை அண்ணா பல்கலை கழகத்தின் கீழே வராது. வேலூரில் இருக்கும் ‘வி.ஐ.டி.', சென்னையில் இருக்கும் ‘எஸ். ஆர். எம்.', தஞ்சாவூரில் இருக்கும் ‘சாஸ்த்ரா' போன்றவை இதில் அடங்கும். இவற்றிற்கு எல்லாம் தனித்தனியே அப்ளிகேசன் வாங்க வேண்டும். இதிலும் அப்ளிகேசன் வாங்க ஆயிரம் ரூபாய் ரேஞ்சில் பணம் கட்ட வேண்டி இருக்கலாம். டொனேசனும் கொடுக்க வேண்டி இருக்கும்.

இப்போது உங்களுக்கு +2வில் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பது உங்களுக்கு தோராயமாக தெரியும். இன்னும் சில வாரங்களில் சரியாகத் தெரிந்து விடும். உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற நல்ல கல்லூரியையும், நல்ல பிரிவையும் தேர்ந்தெடுப்பது எப்படி?

அதற்கு முன், அரசு கல்லூரிகள் என்ன என்ன இருக்கின்றன? தனியார் கல்லூரிகள் என்ன இருக்கின்றன? இவற்றில் எது நல்ல கல்லூரி என்பதை தேர்ந்தெடுப்பது எப்படி? சில தனியார் கல்லூரிகளின் ‘தில்லாலங்கடி' வேலைகளைப் புரிந்து கொள்வது எப்படி? இவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

1 comment: